×

2 கடைகளின் சுவரில் துளையிட்டு ரூ.20 லட்சம் செல்போன் ரூ.1.60 லட்சம் கொள்ளை

தாம்பரம்: குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே ஜிஎஸ்டி சாலையில் பல்வேறு கடைகள் இயங்கி வருகின்றன. இங்கு, மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்த அன்சாரி (33) என்பவர் செல்போன் விற்பனை செய்யும் கடையும், மன்சூர் (31) என்பவர் துணி கடையும் நடத்தி வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல வியாபாரம் முடிந்த பின், கடையை மூடிவிட்டு சென்ற அவர்கள் நேற்று காலை மீண்டும் கடையை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, சுவற்றில் துளையிட்டு அதன் வழியாக உள்ளே வந்த மர்ம நபர்கள் செல்போன் கடையில் இருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான 80க்கும் மேற்பட்ட புதிய செல்போன்கள் மற்றும் கல்லாவில் இருந்த ரூ.1.20 லட்சம் மற்றும் அருகிலிருந்த துணி கடையில் ரூ.40 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. புகாரின் பேரில் குரோம்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

 

The post 2 கடைகளின் சுவரில் துளையிட்டு ரூ.20 லட்சம் செல்போன் ரூ.1.60 லட்சம் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Tambaram ,GST ,Crompet ,Ansari ,Ranganathapuram ,West Tambaram ,Mansoor ,Dinakaran ,
× RELATED தாம்பரம் அருகே உணவகத்தில் தீ விபத்து..!!