×

மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்து கணவனை இழந்த பெண்ணை பலாத்காரம் செய்தவர் கைது: வீடியோ எடுத்து தொடர்ந்து சித்ரவதை செய்தது அம்பலம்

அம்பத்தூர்: மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்து, கணவனை இழந்த பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். பலாத்காரம் செய்ததை வீடியோவாக எடுத்து அவர் தொடர்ந்து பெண்ணை சித்ரவதை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. சென்னை அண்ணா நகரை சேர்ந்த 35 வயது பெண், கணவரை இழந்து தனியாக வசித்து வருகிறார். இவர், அதே பகுதியில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் வேலை செய்து வருகிறார். அங்கு, பணிபுரிந்து வந்த முகப்பேர் பகுதியை சேர்ந்த இந்திரஜித்(35) என்பவர், இந்த பெண்ணுடன் பழகி வந்துள்ளார். மேலும், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகூறி நெருங்கி பழகிய அவர், கோயம்பேட்டில் உள்ள ஒரு தனியார் விடுதிக்கு இந்த பெண்ணை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்து, இந்த பெண்ணை இந்திரஜித் பலாத்காரம் செய்துள்ளார்.

மயக்கம் தெளிந்தவுடன், இதுபற்றி இளம்பெண் கேட்டபோது, ‘‘உன்னை பலாத்காரம் செய்ததை வீடியோ எடுத்து வைத்துள்ளேன். இதுபற்றி வெளியில் சொன்னால் அந்த வீடியோவை இணையதளத்தில் வெளியிடுவேன்,’’ என இந்திரஜித் மிரட்டியுள்ளார். மேலும், அந்த வீடியோ வைத்து அடிக்கடி மிரட்டி அந்த பெண்ணிடம் பணம், நகை கேட்டு சித்ரவதை வந்துள்ளார். இதனால் மன வேதனை அடைந்த அப்பெண் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், பலாத்காரம், மிரட்டல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்கு பதிந்து, இந்திரஜித்தை தேடி வந்தனர்.
இந்நிலையில், முகப்பேர் பகுதியில் பதுங்கி இருந்த இந்திரஜித்தை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்து கணவனை இழந்த பெண்ணை பலாத்காரம் செய்தவர் கைது: வீடியோ எடுத்து தொடர்ந்து சித்ரவதை செய்தது அம்பலம் appeared first on Dinakaran.

Tags : Ambalam ,Ampathur ,Chennai Anna Nagar ,
× RELATED சுற்றுச்சூழல் அனுமதி பெறும் முன்பே...