×

அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரோஸ் அவென்யூ நீதிமன்றம் சம்மன்!


டெல்லி: அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரோஸ் அவென்யூ நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா, மாநிலங்களவை எம்பி சஞ்சய் சிங் உள்ளிட்டோர் மீது சிபிஐ, அமலாக்கத்துறை வழக்குபதிந்தது. கடந்த ஓர் ஆண்டாக ஆம்ஆத்மி மூத்த தலைவர்கள் சிலர் சிறையில் உள்ளனர். இவ்வழக்கில் ஆம் ஆத்மியின் தலைவரும், டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி வருகிறது. இதுவரை 8 சம்மன்கள் அனுப்பப்பட்டும், அவர் அமலாக்கத்துறை முன் ஆஜராகவில்லை.

மேலும் சம்மன் சட்ட விரோதமானது என்றும், அரசியல் காழ்ப்புணர்ச்சி, பழிவாங்கும் உணர்வோடு அனுப்பப்படும் சம்மன்கள் என்று கெஜ்ரிவால் ஆஜராக மறுத்து வந்தார். இதனிடையே தாங்கள் அனுப்பும் சம்மனுக்கு டெல்லி முதல்வர் ஒத்துழைக்க மறுப்பதாக அமலாக்கத்துறை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் விளக்கமளிக்க அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மார்ச் 16ம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

The post அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரோஸ் அவென்யூ நீதிமன்றம் சம்மன்! appeared first on Dinakaran.

Tags : ROSE AVENUE COURT ,ARVIND KEJRIWAL ,Delhi ,Enforcement Department ,Delhi government ,Yes Atmi ,Manish Sisodia ,Sanjay Singh ,Dinakaran ,
× RELATED மதுபான கொள்கை முறைகேடு வழக்கு;...