×

புதுச்சேரியில் 9 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் அதிர்ச்சி அளிக்கிறது: ராகுல் காந்தி

டெல்லி: புதுச்சேரியில் 9 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் அதிர்ச்சி அளிக்கிறது என ராகுல்காந்தி எம்.பி. தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் கஞ்சா போதையில் பலாதாரம் செய்ய முயற்சித்து சிறுமியை கொன்ற முதியவர் மற்றும் வாலிபரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; புதுச்சேரியில் 9 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

எல்லாவற்றிற்கும் மேலாக, நாட்டில் மகள்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் ஏன் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன? 2022ல் மட்டும் பெண்களுக்கு எதிராக 4.5 லட்சம் குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளன, அதில் 31 ஆயிரம் வழக்குகள் கற்பழிப்பு மட்டுமே. உத்தரகாண்டில் சாலையில் அமர்ந்திருக்கும் அங்கிதா பண்டாரியின் குடும்பமாக இருந்தாலும் சரி, மத்தியப் பிரதேசத்தில் மனைவிக்கு நேர்ந்த கொடுமைக்கு நீதி கிடைக்காததால் குழந்தைகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவனாக இருந்தாலும் சரி,

ஜார்கண்டில் கூட்டு பலாத்காரத்திற்கு ஆளான ஸ்பெயின் சுற்றுலா பயணியாக இருந்தாலும் சரி, இதுபோன்ற ஒவ்வொரு சம்பவமும் ஒரு உணர்வற்ற அமைப்பு மற்றும் கொடூரமான சமூகத்தின் பிரதிபலிப்பாகும், இது ஒரு தேசமாக நாம் சுயபரிசோதனை செய்ய வேண்டிய விஷயம். பெண்களுக்கான பாதுகாப்பும் மரியாதையும் வளர்ந்த தேசத்தின் அடையாளம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post புதுச்சேரியில் 9 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் அதிர்ச்சி அளிக்கிறது: ராகுல் காந்தி appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Rahul Gandhi ,Delhi ,Rakulkanti M. B. ,
× RELATED இந்த தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல; நமது...