×

பாலக்காட்டில் நாளை பகவதி அம்மன் கோவில் திருவிழா

பாலக்காடு, மார்ச் 7: பாலக்காட்டில் வடக்கந்தரை திருப்புராய்க்கல் பகவதி அம்மன் கோவில் திருவிழா நாளை (மார்ச் 8ம் தேதி) வெகுவிமர்சையாக நடக்கிறது. முன்னதாக, கடந்த பிப்.23ம் தேதி கும்மாட்டி திருவிழாவுடன் விழா நிகழ்ச்சிகள் துவங்கின. தொடர்ந்து 15 நாட்களும் அம்மனுக்கு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்று வந்தன. இன்று கோவில் வளாகத்தில் யானைகளுக்கு அலங்கரிக்கப்படும் அணிகலன்கள் பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது.

தொடர்ந்து நாளை காலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு விஷேச அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெறுகிறது. தொடர்ந்து நாதஸ்வர கச்சேரியுடன் அம்மனுக்கு நிவேத்யஉருளி எழுந்தருளல் மற்றும் 11 யானைகள் அலங்காரத்துடன் கோவில் மைதானத்தில் காழ்ச்சஸ்ரீவேலி பஞ்சவாத்யம் முழங்க யானை மீது அம்மன் பவனி வருகிறார்.

மதியம் 12 மணிக்கு உச்சிக்காலப்பூஜை, தாயம்பகா வாத்தியம் ஆகியவை நடைபெறுகிறது. இதனையடுத்து மாலை 4 மணிக்கு பாலக்காடு பெரியகடை வீதி சந்திப்பு அம்மன் கோவிலிலிருந்து யானைகள் ஊர்வலம் புறப்பட்டு பாலக்காடு நகர வீதியில் அம்மன் ஊர்வலம் யானை மீது பஞ்சவாத்யங்களுடன் நடைபெறுகிறது.

இதற்கிடையில் வேடங்கள் தரித்த நாட்டிய கலைஞர்களின் நாட்டியம், காவடியாட்டம், நையாண்டி மேளம், நாட்டுப்புற பாடல் நாட்டியம், ஆகியவை இடம்பெறுகிறது. மார்ச் 9ம் தேதி அதிகாலை 3 மணிக்கு கோவில் மைதானத்தில் கம்பம் பூத்திரி மத்தாப்பூகள் வானவேடிக்கை நிகழ்ச்சியும் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியைப்பார்க்க பாலக்காடு மாவட்டத்தின் சுற்று வட்டார பகுதி மக்கள் கோவிலுக்கு திரளாக வருகின்றனர்.

The post பாலக்காட்டில் நாளை பகவதி அம்மன் கோவில் திருவிழா appeared first on Dinakaran.

Tags : Bhagwati Amman temple festival ,Palakkad ,Vadakandar Tirupuraikal Bhagwati Amman temple festival ,Kummathi festival ,Abhishekam ,Amman ,Bhagwati Amman temple festival in ,
× RELATED நத்தம் கோவில்பட்டியில் பகவதி அம்மன் கோயில் திருவிழா