×

காவலர்களுக்கு எஸ்பி அறிவுறுத்தல் மயிலாடுதுறை அரசு கல்லூரியில் ரூ.4.40 கோடியில் நூலக கட்டிடம்

மயிலாடுதுறை, மார்ச்7: மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் கல்லூரி விரிவாக்கத்தை முன்னிட்டு பூமிபூஜை நடைபெற்றது. கல்லூரியின் அருகாமையில் உள்ள 5 ஏக்கர் நிலத்தில் 10 வகுப்பறைகள், ஒரு நூலக கட்டிடம் மற்றும் விளையாட்டு மைதானம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக தரைதளம் மற்றும் இரண்டு மாடிக்கட்டிடமாக ரூ.4.40 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள நூலகக் கட்டடத்துக்கு நடைபெற்ற பூமிபூஜை விழாவுக்கு கல்லூரி முதல்வர் பத்மினி தலைமை வகித்தார். இதில், மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, அடிக்கல் நாட்டி பணிகளை தொடக்கி வைத்தார். இதில், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் தேவி நர்மதா மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.

The post காவலர்களுக்கு எஸ்பி அறிவுறுத்தல் மயிலாடுதுறை அரசு கல்லூரியில் ரூ.4.40 கோடியில் நூலக கட்டிடம் appeared first on Dinakaran.

Tags : Mayiladuthurai Government College ,Mayiladuthurai ,Bhumi Puja ,Gnanambikai Government Women Arts College ,Mayiladuthurai Dharumapuram ,SP ,Dinakaran ,
× RELATED கோடை காலத்தில் தகுந்த நேரத்தில்...