×

பனந்தோப்பில் திடீர் தீ

மோகனூர், மார்ச் 7:மோகனூர் – கிடாரம் சாலையோரம், சுமார் 4 ஏக்கரில் தனியாருக்கு சொந்தமான பனந்தோப்பு உள்ளது. இங்கு சுமார் 400 பனைமரங்கள் உள்ளன. இந்த தோப்பில் நேற்று பிற்பகல் 1 மணியளவில் திடீரென தீப்பற்றியது. சுட்டெரித்த வெயிலால் மளமளவென பரவிய தீ அருகருகே இருந்த பனை மரங்களுக்கும் பரவியது. இதனால், அங்கு பெரும் புகைமூட்டம் எழுந்தது. இதை பார்த்த பனைமரம் ஏறும் தொழிலாளி நவீன்குமார், மோகனூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 4 மணிநேரம் போராடி தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில், 100க்கும் மேற்பட்ட மரங்கள் முற்றிலும் எரிந்தது. சாலையோரம் இருந்த குப்பையில் ஏற்பட்ட தீ பரவி பனைமர தோப்பில் தீப்பற்றி இருக்கலாம் என அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

The post பனந்தோப்பில் திடீர் தீ appeared first on Dinakaran.

Tags : Mohanur ,Along ,Mohanur – ,Kitaram Road ,Panandop ,
× RELATED தண்ணீர் உறிஞ்சினால் இணைப்பு துண்டிப்பு