×

டிராக்டர் ஓட்டியபோது பிளஸ் 1 மாணவர் பலி

ஊத்தங்கரை, மார்ச் 7: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை அருகேயுள்ள மகனூர்பட்டி நாரிக்கானூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி முனாப். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். 3வது மகன் பியார் லோகன்(16), அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்1 படித்து வந்தார். நேற்று முன்தினம் முனாப்பின் விவசாய நிலத்தில் உழவு பணிகளை முடித்து விட்டு, டிராக்டரை அங்கேயே டிரைவர் நிறுத்தி விட்டுச் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த பியார் லோகன், டிராக்டரை எடுத்து ஓட்டியுள்ளார். அப்போது பள்ளத்தில் இறங்கிய டிராக்டர், கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த பியார் லோகனை, அக்கம்பக்கத்தினர் மீட்டு, திருப்பத்தூரில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், மாணவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். பிளஸ்1 பொதுத்தேர்வு தொடங்கியுள்ள நிலையில், மாணவர் உயிரிழந்த சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post டிராக்டர் ஓட்டியபோது பிளஸ் 1 மாணவர் பலி appeared first on Dinakaran.

Tags : Uthangarai ,Munab ,Maganurpatti Narikanoor ,Singarapet ,Krishnagiri district ,Pyaar Logan ,Dinakaran ,
× RELATED மறியலில் ஈடுபட்ட 35 பேர் மீது வழக்கு