- உச்ச நீதிமன்றம்
- புது தில்லி
- தலைமை நீதிபதி
- மன்மோகன்
- நீதிபதி
- HMJ மன்மீத்
- நாதம் தமிழர் கட்சி
- தில்லி உயர் நீதிமன்றம்
- தின மலர்
புதுடெல்லி: டெல்லி உயர்நீதிமன்றத்தில் கரும்பு விவசாயி சின்னம் கேட்டு நாம் தமிழர் கட்சி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி மன்மோகன் மற்றும் நீதிபதி ஹெச்.எம்.ஜெ.மன்மீத் ஆகியோர் அடங்கிய அமர்வு,‘‘இந்த விவகாரத்தில் முன்னதாக பதிவு செய்த கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்து விட்டதால், இதில் தலையிட்டு எந்தவித உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்தனர். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,‘‘இந்த விவகாரத்தில் டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்து விட்டு, எங்களுக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கீடு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post உச்ச நீதிமன்றத்தில் கரும்பு விவசாயி சின்னம் கேட்டு மேல்முறையீடு appeared first on Dinakaran.