×

திரிணாமுல் பிரமுகர் சிபிஐயிடம் ஒப்படைப்பு

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் கொரோனா காலகட்டத்தில் ரேஷன் பொருள் விநியோகத்தில் ஊழல் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டில் அப்போதைய உணவுத்துறை அமைச்சராக இருந்த ஜோதிப்ரியோ மல்லிக் கடந்த 2022ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் சோதனை நடத்த சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய திரிணாமுல் பிரமுகர் ஷேக் ஷாஜகான் பிப்ரவரி 29ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த விசாரணையை சிபிஐக்கு மாற்றி கொல்கத்தா உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. மேலும் கைது செய்யப்பட்ட ஷேக் ஷாஜகான் சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டார்.

The post திரிணாமுல் பிரமுகர் சிபிஐயிடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Tags : Trinamool ,CBI ,Kolkata ,Food Minister ,Jyotipriyo Mallik ,West Bengal ,Dinakaran ,
× RELATED சந்தேஷ்காலியில் வெடிபொருள்...