×

வியாபாரி கொலை: போலீஸ்காரர் கைது: அதிரடி சஸ்பெண்ட்

சேலம்: சேலம் செவ்வாய்பேட்டையை சேர்ந்த வெள்ளி வியாபாரியான சங்கர், கடந்த மாதம் 2ம் தேதி காலை பால் வாங்குவதற்காக நடந்து சென்றபோது கார் ஏற்றிக்கொல்லப்பட்டார். இது தொடர்பாக செவ்வாய்பேட்டை போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தினர். இதில் குடும்ப பிரச்னை காரணமாக அவரது தங்கை கணவர் சுபாஷ்பாபு தான் கூலிப்படையை ஏவி, சங்கரை தீர்த்துக் கட்டியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக ரவுடி வேலாயுதம், கோழி பாஸ்கரின் இரட்டை சகோதரிகள், ரஞ்சித்குமார் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவான கூலிப்படை கும்பலின் தலைவனான பிரபல ரவுடி கோழி பாஸ்கர், அவரது தம்பி ராஜா ஆகியோர் சரணடைந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கோழி பாஸ்கர், அவரது சகோதரி மகன் மதன்குமார், ரஞ்சித்குமார் ஆகியோரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

அதில், இந்த கொலையில் சூரமங்கலம் ஸ்டேசனில் பணியாற்றிய போலீஸ்காரர் உதயகுமார் (35), செவ்வாய்பேட்டையை சேர்ந்த ஆரீப் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. போலீஸ்காரர் உதயகுமாருக்கும், பெண் ஒருவருக்கும் தவறான தொடர்பு இருந்துள்ளது. அந்த பெண் மூலமாக தலைமறைவாக இருந்த ரவுடி கோழி பாஸ்கருக்கும், போலீஸ்காரர் உதயகுமாருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கொலை நடந்த பிறகு ரவுடியை சந்தித்து பேசியதுடன், பண உதவியும் வழங்கியுள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸ்காரர் உதயகுமாரை நேற்று அதிரடியாக சஸ்பெண்ட் செய்து கமிஷனர் விஜயகுமாரி உத்தரவிட்டார். அதன்பிறகுதான் அவரை போலீசார் கைது செய்தனர். ஆரீப் கைது செய்யப்பட்டார்.

The post வியாபாரி கொலை: போலீஸ்காரர் கைது: அதிரடி சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Salem ,Shankar ,Dinakaran ,
× RELATED சேலத்தில் வெயிலில் ஆஃப்பாயில் போட முயன்றவர்களிடம் போலீசார் விசாரணை..!!