×

ரூ.25 லட்சம் சொத்தை அபகரித்த பாஜ மாவட்ட தலைவரின் கணவர்: கொலை மிரட்டல் விடுப்பதாக எஸ்.பியிடம் புகார்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் எண்ணமங்கலம், குன்னிக்காட்டு கருப்புசாமி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் நாச்சிமுத்து. இவர் நேற்று ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: நான் உள்பட எனது சகோதர சகோதரிகள் 4 பேருக்குச் சொந்தமாக எண்ணமங்கலம் கிராமத்தில் 6 ஏக்கர் பூர்விக விவசாய நிலம் இருந்தது. அதில், எனது பங்கு ஒன்றரை ஏக்கர் நிலத்தை கடந்த 2013ல் எங்கள் ஊரைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவசேனாபதி என்பவரது உதவியுடன், தற்போதையை ஈரோடு பாஜ வடக்கு மாவட்டத் தலைவரான கலைவாணியின் கணவர் விஜயகுமாருக்கு ₹25 லட்சம் விலைபேசி கிரையம் செய்து கொடுத்தோம். அப்போது எனக்கு ₹3 லட்சம் மட்டுமே கொடுத்தனர்.

அதன்பின்னர் மீதமுள்ள ₹20 லட்சத்தை தொகையை நான் கேட்டபோது, பணமெல்லாம் வழக்கறிஞர் சிவசேனாதிபதியிடம் கொடுத்துவிட்டேன் என விஜயகுமார் கூறிவிட்டார். தொடர்ந்து, நான் சிவசேனாதிபதியை தொடர்பு கொண்டு கேட்டேன். அப்போது அவர் ஒரு செக்கை கொடுத்து தான் சொல்லும்போது வங்கிக்கு சென்று பணம் பெற்றுக் கொள்ளுமாறு கூறினார். மீண்டும் விஜயகுமாரை தொடர்பு கொண்டபோது, பணம் தரமுடியாது, உன்னால் என்ன செய்யமுடியுமோ செய் என்று கூறிவிட்டார். மேலும், அவரது மனைவி பாஜ மாவட்டத் தலைவரான பின்னர், எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து, புகார் அளித்தும் அந்தியூர் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, எனது சொத்தை அபகரித்துக்கொண்டதுடன், எனக்கு கொலை மிரட்டலும் விடுத்து வருபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

The post ரூ.25 லட்சம் சொத்தை அபகரித்த பாஜ மாவட்ட தலைவரின் கணவர்: கொலை மிரட்டல் விடுப்பதாக எஸ்.பியிடம் புகார் appeared first on Dinakaran.

Tags : BJP ,SP ,Erode ,Nachimuthu ,Anthiyur Circle ,Ennamangalam ,Kunnikattu Karpusamy Estate ,Erode District ,Erode SP ,Nanamangalam ,
× RELATED ஈரோட்டில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை