×

புதுச்சேரி சிறுமி கொல்லப்பட்ட சம்பவம்.. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு போக்சோ சட்டம் போதாது: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!!

புதுச்சேரி: புதுச்சேரியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்; புதுச்சேரி மாநிலம், சோலை நகர் பகுதியில் அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்த 9வயது சிறுமி , கொடுர மனம் படைத்த சிலரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்கு போக்சோ சட்டங்கள் மட்டும் போதாது, இத்தகைய காட்டுமிராண்டிகளுக்கு உட்சப்பட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும், அதுவே இது போன்ற குற்றங்கள் இனி தொடராமல் பாதுகாக்கும் எனவும் வலியுறுத்துவதுடன்.

பச்சிளம் குழந்தையை இழந்து வாடும் பெற்றோரின் வேதனையில் நானும் உங்களது குடும்பத்தில் ஒருவனாக பங்கெடுத்துக் கொள்வதுடன், அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post புதுச்சேரி சிறுமி கொல்லப்பட்ட சம்பவம்.. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு போக்சோ சட்டம் போதாது: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!! appeared first on Dinakaran.

Tags : EDAPPADI PALANISAMI ,Puducherry ,Edapadi Palanisami ,Solai Nagar ,Puducherry State ,
× RELATED ரோடு ஷோ நடத்தினால் மக்கள் ஓட்டு...