×

புதுச்சேரியில் படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோரிடம் முதல்வர் ரங்கசாமி பேச்சுவார்த்தை..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோரிடம் முதல்வர் ரங்கசாமி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். புதுச்சேரியில் பாலியல் பலாத்கார முயற்சியின்போது 9 வயது சிறுமி கொல்லப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி படுகொலைக்கு நியாயம் கேட்டு வீதியில் இறங்கி புதுவை மக்கள் போராடி வருகின்றனர். கல்லூரி மாணவர்கள், மாணவிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் புதுவையின் பல பகுதிகளில் ஒன்று திரண்டு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுவையில் கஞ்சா உள்ளிட்ட போதை – வஸ்துகளின் நடமாட்டம் அதிகரித்து விட்டதாக பல்வேறு அரசியல் கட்சிகள் அடுக்கடுக்காக குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதனிடையே, காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அதிரடியாக கூட்டியுள்ளார். மூத்த அதிகாரிகள் பங்கேற்றுள்ள இந்த கூட்டத்தில் 9 வயது சிறுமி கொலை விவகாரம் பற்றி விசாரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்க்கட்சிகளின் போதை நடமாட்ட குற்றச்சாட்டுகள் குறித்தும் அதிகாரிகளிடம் முதல்வர் ரங்கசாமி விசாரணை நடத்தினார். கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் மீது பிணையில் வெளியில் வர முடியாத பிரிவில் வழக்கு பதியுமாறு முதல்வர் அறிவுரை வழங்கினார்.

இந்நிலையில், சிறுமி ஆர்த்தியின் தந்தை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை சட்டப்பேரவையில் சந்தித்து பேசினார். குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை சிறுமியின் உடலை வாங்க மாட்டோம் என பெற்றோர் தெரிவித்துள்ளனர். உடலை வாங்க மறுத்த நிலையில் சிறுமியின் பெற்றோரிடம் ரங்கசாமி பேசி வருகிறார். போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தவும் புதுச்சேரி முதலமைச்சரிடம் சிறுமியின் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.

2 மணி நேரமாக தொடரும் சிறுமியின் உடற்கூராய்வு:

புதுச்சேரி சிறுமியின் உடற்கூராய்வு 2 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது. தாசில்தார் முன்னிலையில் சிறுமியின் உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் சிறுமியின் உடற்கூராய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. சிறுமி வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

The post புதுச்சேரியில் படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோரிடம் முதல்வர் ரங்கசாமி பேச்சுவார்த்தை..!! appeared first on Dinakaran.

Tags : Principal ,Rangasami ,Puducherry ,Chief Minister ,
× RELATED சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகிறார் செந்தில் பாலாஜி