×

புதுச்சேரியில் பாலியல் பலாத்கார முயற்சியின்போது சிறுமியை கொலை செய்தவர்கள் மீது போக்சோ சட்டம் பாய்கிறது..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் பாலியல் பலாத்கார முயற்சியின்போது சிறுமியை கொலை செய்தவர்கள் மீது போக்சோ சட்டம் பாய்கிறது. சோலை நகரில் கடந்த மார்ச் 2 சனிக்கிழமை அன்று மதியம் 3 மணியளவில் 9 வயது சிறுமி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். மார்ச் 2ல் மயானக்கொள்ளை நிகழ்ச்சிக்கு நன்கொடை வசூலிக்க சிலர் வந்துள்ளனர். நன்கொடை வசூலிக்க வந்தவர்களை பின்தொடர்ந்த சிறுமி அதன் பிறகு காணவில்லை. 5 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது தெருவில் சிறுமி தனியாக நடந்து செல்லும் காட்சி மட்டும் பாதிவாகியிருந்தது.

சிறுமி முத்தியால்பேட்டையை தாண்டி செல்லவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. (மார்ச் 3) ஞாயிறு காலை முதல் வீடுவீடாகச்சென்று சிறுமியை காவல்துறை தேடி வந்தது. 4 நாட்களாக சிறுமியை தேடிவந்த நிலையில் நேற்று அம்பேத்கர் நகர் பகுதி கால்வாயில் உடல் கண்டெடுக்கப்பட்டது. சிறுமியை கொன்று சாக்கு மூட்டையில் கட்டி சாக்கடையில் வீசியது தெரியவந்தது. சிறுமி உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்திய போலீசார், பலாத்கார முயற்சியில் இறந்ததை உறுதிப்படுத்தினர்.

இதுகுறித்த விசாரணையில், 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, சிறுமியை கொலை செய்தது கருணாஸ் என்ற இளைஞரும், விவேகானந்தன் என்ற முதியவரும் தான் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். முதியவர் பாலியல் கொடுமை செய்ய முயன்றபோது அதிர்ச்சியில் சிறுமி உயிரிழந்துள்ளார். பின்னர், சிறுமியின் கை, கால்களை முதியவரின் வேட்டியால் கட்டி, வாய்க்காலுக்குள் உடலை போட்டுள்ளனர். சிறுமி உயிரிழந்த சனிக்கிழமை அன்றே போலீசுக்கு பயந்து உடலை கால்வாயில் வீசியுள்ளனர்.

இந்நிலையில், பாலியல் பலாத்கார முயற்சியின்போது சிறுமியை கொலை செய்தவர்கள் மீது போக்சோ சட்டம் பாய்கிறது. சிறுமியை பலாத்காரம் செய்யும் முயற்சியின்போது கொலை செய்ததாக 2 பேர் போலீசில் வாக்குமூலம் அளித்ததை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனை முடிந்த பிறகு கொலை வழக்குடன் போக்சோ பிரிவையும் சேர்க்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். கருணாஸ், விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ சட்டம் பாய்கிறது.

 

The post புதுச்சேரியில் பாலியல் பலாத்கார முயற்சியின்போது சிறுமியை கொலை செய்தவர்கள் மீது போக்சோ சட்டம் பாய்கிறது..!! appeared first on Dinakaran.

Tags : PUDUCHERRY ,POXO ,Solai ,
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு