×

புதுமாப்பிள்ளை கழுத்து அறுத்து கொலை

திசையன்விளை: திசையன்விளை அருகே நவ்வலடி அருகே கோடாவிளை கடற்கரை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள மஸ்தான் பள்ளிவாசலின் இடது புறத்தில் கடற்கரையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் வடக்கு பகுதியில் சுமார் 25 முதல் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து உவரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில், சடலமாக கிடந்தவர் தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த கில்டாப் மகன் ஜஸ்டின் (24) என்பது தெரியவந்தது. இவர் திசையன்விளை கடல்சார் கல்லூரியில் படித்து வந்தார். திரேஸ்புரத்தில் ஒரு பெண்ணுக்கும், இவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

இந்நிலையில் உவரி கடற்கரைக்கு வந்த ஜஸ்டின் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையாளிகள் அவரது செல்போனை எடுத்துச் சென்றுள்ளனர். இதனால் அவரது செல்போண் எண்ணிற்கு வந்த அழைப்புகள், பேசிய எண்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு தனது தாயிடம் பணம் அனுப்பச் செல்லி, காலையில் ஊருக்கு வருவதாக தெரிவித்த ஜஸ்டின் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு அவர் நண்பர்கள் சிலருடன் சென்றது தெரியவந்துள்ளது. இதனால் அவருக்கு நன்கு தெரிந்தவர்கள் அழைத்துச் சென்று கொலை செய்திருக்கலாம் என்றும் தெரிகிறது.

The post புதுமாப்பிள்ளை கழுத்து அறுத்து கொலை appeared first on Dinakaran.

Tags : Vektionvilai ,Kodavilai ,Navvaladi ,Mastan ,
× RELATED இன்ஸ்டாவில் அறிமுகமான பெண்ணிடம் 16 பவுன் மோசடி