×

இளநிலை உதவியாளர் பணிக்கு 3ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு நாளை மறுதினம் நடக்கிறது: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: குரூப் 4 பதவியில் அடங்கிய இளநிலை உதவியாளர் பணிக்கு வரும் 8ம் தேதி 3ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) செயலாளர் கோபால சுந்தராஜ் வெளியிட்ட அறிவிப்பு: குரூப் 4 பணிகளில் அடங்கிய கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், கள உதவியாளர், வரித்தண்டலர்(கிரேடு 1) வரித் தண்டலர், பண்டகக் காப்பாளர் போன்ற பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு எழுத்துத்தேர்வு கடந்த 24.7.2022 அன்று நடைபெற்றது. எழுத்துத்தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் தரவரிசை விவரங்கள் கடந்த 24ம் தேதி தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டன. குரூப் 4 பணிகளில் அடங்கிய இளநிலை உதவியாளர் பதவிக்கான மூன்றாம் கட்ட மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வருகிற 8ம் தேதி சென்னை பிராட்வேயில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதற்கான நாள், நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய அழைப்புக்கடிதத்தை விண்ணப்பதாரர்கள் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in-லிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

The post இளநிலை உதவியாளர் பணிக்கு 3ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு நாளை மறுதினம் நடக்கிறது: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : TNPSC ,CHENNAI ,Tamil Nadu Public Service Selection Commission ,Gopala Sundaraj ,Dinakaran ,
× RELATED அறநிலையத்துறை செயல் அலுவலர் பதவி...