×

அனைத்து மருந்து கடைகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்: கலெக்டர் அறிவிப்பு

சென்னை: சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பு:
சென்னை மாவட்டத்தில் மருந்துகள் மற்றும் அழகு சாதனபொருட்கள் சட்டம்-1940 மற்றும் -1945 அட்டவணை ‘‘X” மற்றும் ‘‘H”, ‘‘H1” ‘‘Drugs” குறிப்பிட்டுள்ள மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யும் அனைத்து மருந்து கடைகளிலும் குற்றவியல் நடைமுறை சட்டம்-1973 பிரிவு 133ன் கீழ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இன்றைய (நேற்று) நாளில் இருந்து 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.

தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஆய்வின் போது கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாத மருந்தகங்களின் உரிமையாளர்கள் மீது மேற்கண்ட உரிய சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

The post அனைத்து மருந்து கடைகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்: கலெக்டர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Collector ,Rashmi Siddharth Jagade ,Chennai District ,Dinakaran ,
× RELATED கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டய...