×

கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி அபிஜித் ராஜினாமா: பாஜவில் இணைவதாக அறிவிப்பு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய். இவர் நேற்று காலை உயர்நீதிமன்றத்தில் உள்ள தனது அறைக்கு வந்தார். பின்னர் தனது ராஜினாமா கடிதத்தை . குடியரசு தலைவர் திரவுபதி முர்மூவுக்கு அனுப்பி வைத்தார். மேலும் அதன் நகல்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டிஎஸ் சிவஞானம் ஆகியோருக்கும் அனுப்பி வைத்தார்.

இதனை தொடர்ந்து பிற்பகல் செய்தியாளர்களை சந்தித்த அபிஜித் கங்கோபாத்யாய், ‘‘திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஊழலுக்கு எதிராக போராடும் தேசிய கட்சி என்பதால் நான் பாஜவில் சேருகிறேன். மார்ச் 7ம் தேதி பாஜவில் இணைகிறேன்” என்றார்.

The post கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி அபிஜித் ராஜினாமா: பாஜவில் இணைவதாக அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Kolkata High Court ,Abhijit ,Kolkata ,West Bengal ,Judge ,Abhijit Gangobadhyay ,President of the Republic ,Tirupati Murmu ,Abhijit Resigns ,Bajaj ,Dinakaran ,
× RELATED ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கு; 24,000...