×

இந்தியாவின் முதல் நீருக்கடியில் மெட்ரோ ரயில்

கொல்கத்தா: கொல்கத்தாவில் இந்தியாவின் முதல் நீருக்கடியில் மெட்ரோ ரயில் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். கொல்கத்தாவின் கிழக்கு – மேற்கு மெட்ரோ வழித்தடத்தின் ஒருபகுதியாக ஹவுரா மேம்பாலம் – எஸ்பிளனேட் பகுதிகளுக்கு இடையே மெட்ரோ ரயில் பாதை தயாராகி வருகிறது.

ஹூக்ளி ஆற்றுக்கு அடியில் 16 மீட்டர் ஆழத்தில், 520 மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்டு வரும் இந்த வழித்தடத்தில் 45 விநாடிகளில் ரயில் கடந்து செல்லும். இந்தியாவின் முதல் நீருக்கடியில் அமையும் இந்த ரயில் வழித்தடத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

The post இந்தியாவின் முதல் நீருக்கடியில் மெட்ரோ ரயில் appeared first on Dinakaran.

Tags : India ,Kolkata ,Modi ,Howrah ,Esplanade ,
× RELATED I.N.D.I.A. கூட்டணி ஆட்சிக்கு வந்தால்...