- க்கான முகாம்
- சிங்கம்புணரி
- வேதியான்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி
- டாக்டர்
- சிவராமன்
- கிராமப்புற மேம்பாட்டு நிறுவனம்
- ஊனமுற்றோருக்கான மருத்துவ
- தின மலர்
சிங்கம்புணரி, மார்ச் 5: உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் சிங்கம்புணரி பேரூராட்சிக்கு உட்பட்ட வேட்டையன்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் முனைவர் சிவராமன் தலைமை வகித்தார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் 25 பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனம், பேட்டரி சக்கர நாற்காலி, தையல் இயந்திரம், காதொலிக் கருவி, திறன்பேசி என 13 லட்சத்தி 16 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான உபகரணங்கள் வழங்கப்பட்டது. 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாமில் கலந்து கொண்டனர். சிங்கம்புணரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திர குமார், ஜெகநாதசுந்தரம், புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமணராஜு, ஒன்றிய பொருளாளர் இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம் appeared first on Dinakaran.