×

போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பனை அடித்து கொன்ற வாலிபர்கள் 2 பேர் கைது: மேலும் 3 பேருக்கு வலை

தாம்பரம்: போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பனை அடித்து கொலை செய்த 2 வாலிபர்களை, போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான 3 பேரை தேடி வருகின்றனர். மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் சுமேஷ் (20). இவர் நேற்று முன்தினம் மாலை, வண்டலூர் பகுதியில் உள்ள அவரது நண்பர் லோகேஷ், தயாகரன் மற்றும் மேடவாக்கம் பகுதியை சேர்ந்த 3 நண்பர்கள் ஆகியோருடன் சேர்ந்து, புதுபெருங்களத்தூர், ஏரிக்கரை தெரு, கேப்டன் சசி நகரில் ஒன்றாக மது அருந்தியுள்ளார்.

அப்போது, போதையில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, அடிதடியாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த நண்பர்கள் லோகேஷ் மற்றும் தயாகரன் அங்கு கிடந்த சவுக்கு கட்டையை எடுத்து, சுமேஷின் தலையில் ஓங்கி அடித்துள்ளனர். இதில், அவர் படுகாயமடைந்து, ரத்த வெள்ளத்தில் மயங்கி உள்ளார். இதையடுத்து, நண்பர்கள் அங்கிருந்து தப்பினர். அதிகளவு ரத்தப்போக்கு காரணமாக சுமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், பீர்க்கன்காரணை போலீசாருக்கு இதுபற்றி தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சுமேஷின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய சுமேஷின் 2 நண்பர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

The post போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பனை அடித்து கொன்ற வாலிபர்கள் 2 பேர் கைது: மேலும் 3 பேருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Sumesh ,Mylapore ,Vandalur ,
× RELATED தாம்பரம் அருகே உணவகத்தில் தீ விபத்து..!!