×

சட்டீஸ்கரில் பயங்கரம் நக்சலைட்டுகள்-போலீசார் துப்பாக்கி சண்டை; 2 பேர் பலி

ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்கள்-போலீசார் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 2 பேர் இறந்தனர். சட்டீஸ்கர் மாநிலம் கான்கெர் மாவட்டம் ஹிதுர் வனப்பகுதியில் நக்சலைட்டுகளின் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் விரைந்து சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு பதுங்கி இருந்த நக்சலைட்டுகள், திடீரென போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். போலீசாரும் பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. நீண்ட நேரம் நீடித்த இந்த துப்பாக்கி சண்டையில் ஒரு போலீஸ்காரர், நக்சலைட் பலியாகினர். தொடர்ந்து மற்ற நக்சலைட்டுகள் அடர்ந்த வனப்பகுதிக்குள் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

The post சட்டீஸ்கரில் பயங்கரம் நக்சலைட்டுகள்-போலீசார் துப்பாக்கி சண்டை; 2 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Naxalites-Police Gunfight ,Chhattisgarh ,Raipur ,Naxalites ,Hidur ,Kanker district ,Naxalites- ,Dinakaran ,
× RELATED ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புவதாக புபேஷ் பகேல் கருத்து!!