×

பிரதமர் மோடி வருகை!: சென்னையில் போக்குவரத்து மாற்றம்…வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அறிவுறுத்தல்..!!

சென்னை: பிரதமர் மோடி இன்று சென்னை வருவதை முன்னிட்டு நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணியளவில், நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி சென்னை வருகிறார். இதையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அதன்படி அண்ணா சாலையில், நந்தனம் ஒய்.எம்.சி.ஏ முதல் அண்ணா மேம்பாலம் வரை, மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாநாடு நடைபெறும் இடமும், அதனை சுற்றியுள்ள சாலைகளான அண்ணா சாலை, எஸ்.வி பட்டேல் சாலை, காந்தி மண்டபம் சாலை, ஜிஎஸ்டி சாலை, மவுண்ட் பூந்தமல்லி சாலை, சிப்பெட் சந்திப்பு மற்றும் 100 அடி சாலை வரை போக்குவரத்து சிறிதளவு நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனவே இந்த சாலைகளை தவிர்த்து மாற்று வழியில் செல்ல போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இன்று பிற்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை சென்னை நகருக்குள் வணிக வாகனங்கள் வந்துசெல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே வாகன ஓட்டிகள் அதற்கேற்ப தங்களது பயணத்தை திட்டமிடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post பிரதமர் மோடி வருகை!: சென்னையில் போக்குவரத்து மாற்றம்…வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அறிவுறுத்தல்..!! appeared first on Dinakaran.

Tags : Modi ,Chennai ,PM Modi ,Nandanam YMCA ,
× RELATED அதிக அளவில் மக்களை வாக்களிக்க வைக்க...