×

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மாநில அளவிலான நடை போட்டி

தஞ்சாவூர், மார்ச் 4: தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு மாநில அளவிலான நடை போட்டி நடைபெற்றது. தஞ்சை தனியார் அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட இந்த நடைப்போட்டியை அறக்கட்டளை நிறுவன தலைவர் உலகநாதன் முன்னிலையில் மேயர் சண்.ராமநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் 15 வயது முதல் 20 வயது வரையிலான பெண்கள், 20 முதல் 30 வயது வரை, 30 முதல் 40 வரை, 40 முதல் 50 வரை, 50 வயதுக்கு மேல் என 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடை போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

நடைபோட்டி விளையாட்டு மைதானத்தில் தொடங்கி 5 கி.மீ. தூரம் வரை நடைபெற்றது. வெற்றி பெற்ற பெண்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடம் பிடித்த பெண்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் ரொக்கத்துடன் கோப்பை வழங்கப்பட்டது. இதேபோல் ஒவ்வொரு பிரிவிலும் 2 மற்றும் 3-ம் இடம் பிடித்த பெண்களுக்கு முறையே தலா ரூ.5000, ரூ.3000 ரொக்கத்துடன் கோப்பைகள் வழங்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு பிரிவிலும் ஆறுதல் பரிசாக தலா 10 பேருக்கு தலா ரூ.200 வழங்கப்பட்டது. மேலும் கலந்து கொண்ட அனைத்து பெண்களுக்கும் புடவை, சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல், மாவட்ட தடகள சங்க தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார், முரளிதரன், பான்செக்கர்ஸ் கல்லூரி முதல்வர் காயத்ரி, வாண்டையார் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கீர்த்திகா, டாக்டர் சாத்தப்பன், பொறியாளர் முத்துக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மாநில அளவிலான நடை போட்டி appeared first on Dinakaran.

Tags : International Women's Day ,Thanjavur ,Thanjavur's Annai Satya Sports Ground ,Thanjavur Private Foundation ,Ulaganathan ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...