×

கடத்தலை தடுக்க கடற்கரையில் போலீசார் தீவிர சோதனை

தொண்டி, மார்ச் 3: தொண்டி மற்றும் சுற்றுவட்டார கடற்கரை பகுதியில் கடத்தலை தடுக்கும் விதமாக முக்கிய இடங்களில் போலீசார் சோதனை செய்தனர். தமிழகத்தில் இருந்து இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு தங்கம் மற்றும் போதை பொருள்கள் அதிகளவில் கடத்தல் நடக்கிறது. கடத்தலை தடுக்க போலீசார் பல்வேறு கட்ட நடவடிக்கை எடுத்து வந்தாலும் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் உள்ளது. கடந்த மாதங்களில் அதிகளவில் இலங்கைக்கு கடத்துவதற்கு தயார் நிலையில் இருந்த கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் நேற்று தொண்டி கடற்கரை காவல் நிலைய சரகம் எம்.ஆர்.பட்டிணம், பி.வி.பட்டிணம் மற்றும் தொண்டி கடற்கரை பகுதிகளில் கடத்தல் சம்பவம் நடக்கும் இறங்கு தளங்களில் ராமேஸ்வரம் பிரிவு காவல் ஆய்வாளர் கனகராஜ் தலைமையில் தொண்டி கடற்கரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் நுண்ணறிவு பிரிவு இளையராஜா மற்றும் போலீசார் இணைந்து கூட்டு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

The post கடத்தலை தடுக்க கடற்கரையில் போலீசார் தீவிர சோதனை appeared first on Dinakaran.

Tags : Thondi ,Tamil Nadu ,Sri Lanka ,Dinakaran ,
× RELATED தொண்டி பகுதியில் வனவிலங்குகளை பாதுகாக்க தண்ணீர் தடாகம் அமைக்க கோரிக்கை