×

ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த மாவட்ட செயலாளர்

நெல்லை: ஒபிஎஸ் அணியில் நெல்லை மாவட்டச் செயலாளராக இருந்த வீகேபி சங்கர் அதில் இருந்து விலகி நேற்று அதிமுகவில் இணைந்தார். ஓபிஎஸ் அணியின் நெல்லை மாவட்ட செயலாளர் வீகேபி சங்கர். இவர் முன்னாள் எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியனின் மகன். அவர் அதிமுக அமைப்புச் செயலாளராக பதவி வகித்து வந்தார். அதிமுகவில் இருந்த வீகேபி சங்கர், ஓபிஎஸ் நீக்கப்பட்ட பின்னர், அவரது அணியில் இணைந்தார். அவருக்கு ஓபிஎஸ் அணியில் நெல்லை மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

தற்போது மக்களவை தேர்தல் விரைவில் நடத்தப்பட உள்ள நிலையில், ஓபிஎஸ், டிடிவி தினகரனுடன் இணைந்து தேர்தலை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் ஓபிஎஸ் அணியின் நெல்லை மாவட்டச் செயலாளராக இருந்த வீகேபி சங்கர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து மீண்டும் அதிமுகவில் இணைந்தார். மக்களவைத் தேர்தலில் ஓபிஎஸ் தனி அணியாக களம் காணும் நிலையில், தென் மாவட்டமான நெல்லையில் அவரது அணியின் மாவட்ட செயலாளர் விலகியிருப்பது மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

The post ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த மாவட்ட செயலாளர் appeared first on Dinakaran.

Tags : District Secretary ,Atamug ,OPS ,Nella ,VKB Shankar ,OBS ,Vkaby Shankar ,Rice District ,MLA ,Karupasamy Pandian ,District ,Atamugal ,Dinakaran ,
× RELATED தி.க. மாவட்ட செயலாளருக்கு மிரட்டல்: 2 பேர் கைது