×

பணம் கொடுக்க மறுத்த

மதுரை, மார்ச். 3: மதுரையில் பணம் கொடுக்க மறுத்ததால், தொழிலதிபரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர். மதுரை, ஜெய்ஹிந்த்புரம் பகுதியை சேர்ந்தவர் அய்யனார் கார்த்திக் (35). தொழிலதிபரான இவர், ஓராண்டுக்கு முன்பாக அவருடன் பழகிய அதே பகுதியை சேர்ந்த தழும்பு சதீஷ் (38) என்பவரிடம் ரூ.1 லட்சம் கடன் வாங்கினார். பின்னர் அந்த தொகையை மூன்று மாதங்களில் திருப்பி கொடுத்ததாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த, 28ம் தேதி தனக்கு திரும்ப கொடுத்த கடன் தொகையுடன் கூடுதலாக ரூ.40 ஆயிரம் கொடுக்க வேண்டும் என தழும்பு சதீஷ் கேட்டுள்ளார். இதற்கு, அய்யனார் கார்த்திக் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தழும்பு சதீஷ் அவரை சரமாரியாக தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து, அய்யனார் கார்த்திக் அளித்த புகாரின்பேரில் ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்கு பதிந்து தழும்பு சதீஷை கைது செய்தனர். கைதான தழும்பு சதீஷ் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

The post பணம் கொடுக்க மறுத்த appeared first on Dinakaran.

Tags : Madurai ,Ayyanar Karthik ,Jaihindpuram, Madurai ,Thambu Satish ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை