×

நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக- விசிக இடையே இன்று 2-ம் கட்ட பேச்சுவார்த்தை

சென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்ககான தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக- விசிக இடையே இன்று 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் விசிக நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்; திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவுடன் விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் இந்திய யூனியன் முஸ்லிம் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியையும் திமுக ஒதுக்கியுள்ளது.

அதனைத்தொடர்ந்து மற்ற கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. திமுக கூட்டணியில் தற்போது வரை 4 கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு நடந்து முடிந்து, 6 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக – விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் இடையே இன்று 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. பேச்சுவார்த்தைக்கு வருமாறு திமுக அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

The post நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக- விசிக இடையே இன்று 2-ம் கட்ட பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.

Tags : Dimuka ,Visika ,Chennai ,Anna Vidyalaya, Chennai ,Chief Treasurer ,D. R. ,Balu ,Dinakaran ,
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...