×

பாலக்காடு ரயில் நிலையத்தில் போதை ஆயில், கஞ்சா பறிமுதல்: வடமாநில வாலிபர் கைது

 

பாலக்காடு, மார்ச்.2: பாலக்காடு சந்திப்பு ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப்படை போலீசார் மற்றும் போதைத் தடுப்புப்பிரிவு போலீசார் ரயில் பயணிகளின் உடமைகளைச் சோதனை செய்தனர். அப்போது, தன்பாத்திலிருந்து-ஆலப்புழா வரை செல்கின்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் எஸ்-1 கோச்சில் கழிவறை அருகே டிப்பன் பாக்ஸில் 600 கிராம் ஹாஷிஸ் ஆயில் கிடந்ததை போலீசார் கைப்பற்றினர். இவற்றின் மதிப்பு சுமார் ரூ.60 லட்சம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், போலீசாரின் சோதனையையடுத்து வட மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் தப்பிக்க முயற்சித்துள்ளார். இதனால் உஷாரடைந்த போலீசார் வாலிபரை பின் தொடர்ந்து மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை செய்ததில் ஒடிஷா மாநிலம் காண்டமால் பகுதியைச் சேர்ந்த பைனா பிரதான் (29) என தெரிய வந்தது.

இவரது உடமைகளை சோதனை செய்ததில் 1 அரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள 3 கிலோ கஞ்சா பொட்டலம் இருந்தது தெரிய வந்தது. இவைகளை பறிமுதல் செய்த போலீசார் வட மாநில தொழிலாளியை கைது செய்தனர். இதேபோல ஷாலிமார் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸில் போலீசார் சோதனை நடத்தியதில் ஜெனரல் கம்பார்ட்மென்டில் சீட்டிற்கு அடியில் 18 கிராம் கஞ்சா பொட்டலம் கிடந்தது. இதையும் கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post பாலக்காடு ரயில் நிலையத்தில் போதை ஆயில், கஞ்சா பறிமுதல்: வடமாநில வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Palakkad railway station ,Palakkad ,Railway Security Force Police ,Anti-Narcotics Police ,Palakkad Junction ,station ,Dhanbad ,Alappuzha ,
× RELATED குழல்மந்தம் அருகே தேர்தல் விதிகளை மீறி மது விற்பனை செய்த பெண் கைது