×

போராடி அணைத்த தீயணைப்புத்துறையினர் ரூ.1.47 கோடி செலவில் 42 புதிய மின்மாற்றிகள்

 

தஞ்சாவூர், மார்ச் 2: நடப்பாண்டு ஜனவரி மாதம் 42 புதிய மின்மாற்றிகள் ரூ.1 கோடியே 47 இலட்சம் செலவில் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பழுதான மின்மாற்றிகள் உடனுக்குடன் பழுதுநீக்கம் செய்து சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. 2023-24ம் ஆண்டு இலக்கீட்டின் படி தாட்கோ திட்டத்தில் 31 மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 2023-24 ம் ஆண்டு இலக்கீட்டின் படி 350 சிறப்பு முன்னுரிமை திட்டத்தில் 36 மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post போராடி அணைத்த தீயணைப்புத்துறையினர் ரூ.1.47 கோடி செலவில் 42 புதிய மின்மாற்றிகள் appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Tamil Nadu Power Generation and Distribution Corporation ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் மாவட்டத்தில் மின்மோட்டாரை...