×

குறிச்சிக்குளம் கிராமத்தில் திரௌபதி அம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்

 

அரியலூர், மார்ச் 2: அரியலூர் மாவட்டம், ஆர்.எஸ்.மாத்தூர் குறிச்சிக்குளம் கிராமத்தில் திரௌபதி அம்மன் கோயில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு கடந்த 13ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து நாள் தோறும் கோயிலில் மகாபாரதம் சொற்பொழிவு நிகழ்ச்சி, நாடகம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக திரௌபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அபிஷேகம் நடத்தப்பட்டு, அதன் பின்னர் அம்மன் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தேரோட்டத்தில் சுற்று வட்டார கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதே போல அருகேயுள்ள பெரும்பாண்டி கிராமத்தில் தீமிதி திருவிழா நடந்தது. பெரும்பாண்டி கிராமத்திலுள்ள திரௌபதியம்மன் கோயிலில் கடந்த வாரம் காப்பு கட்டுதலைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று மாலை நடைபெற்றது. திரளான பக்தர்கள் தீ குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

The post குறிச்சிக்குளம் கிராமத்தில் திரௌபதி அம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம் appeared first on Dinakaran.

Tags : Draupadi Amman Temple Therottam Kolagalam ,Kurichikulam village ,Ariyalur ,Draupadi Amman ,RS Mathur Kurichikulam village ,Ariyalur district ,Draupadi Amman Temple Therotam ,Kolagalam ,
× RELATED அரியலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில்...