×

நெல்லை அருகே வாகனம் மோதி விவசாயி பலி

நெல்லை, மார்ச் 2: நெல்லை அருகே நடந்து சென்ற விவசாயி அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானார். பாப்பாக்குடி அருகேயுள்ள புதுக்கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி (55). விவசாயியான இவர், வீட்டில் இருந்து முக்கூடல் – இடைகால் செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். புதுக்கிராமம் இசக்கியம்மன் கோயில் அருகே செல்லும் போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயமடைந்த முத்துசாமி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து பாப்பாக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

The post நெல்லை அருகே வாகனம் மோதி விவசாயி பலி appeared first on Dinakaran.

Tags : Paddy ,Nellai ,Muthuswamy ,Pudugram ,Pappakkudy ,Mukudal ,Ithakal ,
× RELATED நெல்லையில் கட்டுக்கடங்காத கூட்டம்;...