×

இரணியல் அருகே வாலிபர் திடீர் மாயம்

திங்கள்சந்தை, மார்ச் 2 : இரணியல் அருகே கட்டிமாங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் கங்காதரன்(57). இவரது மகன் தயானந்த் (27). டிப்ளமோ பட்டதாரியான இவர் கடந்த 21ம் தேதி திருச்செந்தூர் சென்று வருவதாக வீட்டில் கூறி சென்றுள்ளார். ஆனால் இதுவரை வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். இருந்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து கங்காதரன் இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் அவரது புகாரை பெற போலீசார் மறுத்து விட்டதாக தெரிகிறது. இது குறித்து கங்காதரன் கூறும் போது; இது குறித்து மாவட்ட எஸ்பியிடம் மனு அளிக்க உள்ளேன் என்றார்.

The post இரணியல் அருகே வாலிபர் திடீர் மாயம் appeared first on Dinakaran.

Tags : Iranial ,Gangatharan ,Kattimangode ,Dayanand ,Tiruchendur ,
× RELATED இரணியல் அருகே நள்ளிரவில் குளத்தில் கவிழ்ந்த லாரி