×

தலைமைச் செயலகத்துக்கு விடுக்கபப்ட்ட வெடிகுண்டு மிரட்டல் புரளி

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் 2 மணி நேரம் நடந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி எனத் தெரிய வந்தது. செய்திச் சேனலை தொடர்பு கொண்ட நபர் தலைமைச் செயலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசியில் தெரிவித்தார். தொலைக்காட்சி தரப்பில் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து சோதனை நடத்தப்பட்டது. தலைமைச் செயலகத்தில் 2 மணி நேரம் நடந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி எனத் தெரிந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஓய்வு பெற்ற ஆசிரியர் பிரகாஷை கடலூரில் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தலைமைச் செயலகத்துக்கு விடுக்கபப்ட்ட வெடிகுண்டு மிரட்டல் புரளி appeared first on Dinakaran.

Tags : Secretariat ,CHENNAI ,Chennai headquarters ,Chief Secretariat ,
× RELATED விதிகளை மீறி பத்திரிகைகளில் பாஜ...