×

வேலாயுதம்பாளையம் அருகே மதுபாட்டில் பதுக்கி விற்றவர் கைது

வேலாயுதம்பாளையம், பிப். 29: வேலாயுதம்பாளையம் அருகே மதுபாட்டில் பதுக்கி விற்றவரை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சி புகழிமலை அடிவாரம் அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்துக் கொண்டு திருட்டுத்தனமாக அதிக விலைக்கு மது பாட்டில்களை விற்பனை செய்து வருவதாக வேலாயுதம்பாளையம் போலீசருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரெங்கராஜ் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று பார்த்தபோது அங்கு ஒருவர் மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த ராஜாக்கண்ணு(70) என்பவரை கைது செய்து அவர் விற்பனைக்கு வைத்திருந்த 6 மது பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வேலாயுதம்பாளையம் அருகே மதுபாட்டில் பதுக்கி விற்றவர் கைது appeared first on Dinakaran.

Tags : Velayuthampalayam ,Karur district ,Bukazhur ,Pugazhimalai ,
× RELATED கரூர் மாவட்டம் திருக்காடுதுறை மாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா