×

தனியார் நிறுவனத்தில் ₹40 ஆயிரம் திருட்டு

தர்மபுரி, பிப்.29: பாப்பாரப்பட்டி பனைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் அருணாச்சலம் மனைவி கோகிலா (23). இவர் பாப்பாரப்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 25ம் தேதி, நிறுவனத்தில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு கோகிலா திடுக்கிட்டார். அதில் இருந்த ₹40 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கோகிலா பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தனியார் நிறுவனத்தில் ₹40 ஆயிரம் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Arunachalam ,Kokila ,Paparapatti Panaikulam ,Paparapatti ,Dinakaran ,
× RELATED வாகனம் மோதி பெயிண்டர் பலி