×

அகிலேஷ் இன்று ஆஜராக சிபிஐ சம்மன்

புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் முதல்வராக இருந்தபோது சுரங்க துறையையும் கவனித்து வந்தார். அப்போது 14 குத்தகைகளுக்கு அனுமதி அளித்து இருந்தார். சட்டவிரோதமாக சுரங்கத்திற்கு அனுமதி அளித்ததாகவும், தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்திருந்தும் சட்டவிரோதமாக உரிமங்கள் புதுப்பிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு இன்று ஆஜராகும்படி அகிலேஷ் யாதவிற்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

The post அகிலேஷ் இன்று ஆஜராக சிபிஐ சம்மன் appeared first on Dinakaran.

Tags : CBI ,Akhilesh ,New Delhi ,Uttar Pradesh ,Samajwadi ,Akhilesh Yadav ,minister ,Dinakaran ,
× RELATED நூஹ் பலாத்கார வழக்கு 4...