×

திமுக-காங்கிரஸ் வெற்றி கூட்டணியாக உள்ளது: செல்வப்பெருந்தகை பேட்டி

மீனம்பாக்கம்: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று காலை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: திமுகவிற்கும் காங்கிரசுக்கும் இடையே கருத்து வேறுபாடு, இழுபறி எதுவும் இல்லை. முந்தைய தேர்தல் காலங்களிலும் கடைசி நேரத்திலேயே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. டெல்லி பயணம் என்பது கட்சியின் கட்டமைப்பு, தேர்தல் குறித்த கலந்தாய்வுக்கானது. ஏற்கனவே முடிவு செய்த கூட்டம். யூகங்களின் அடிப்படையில் பரபரப்பை ஏற்படுத்தும் நோக்கத்துடன் செய்திகளை வெளியிட்டு குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம். திமுக கூட்டணி, 5வது முறையாக வெற்றி கூட்டணியாக உள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலினும், ராகுல்காந்தியும் உடன்பிறவா சகோதரர்கள்போல் உறவு வைத்துள்ளார்கள். அதை பிரிக்க வேண்டாம். சரியாக பேச்சுவார்த்தை போய்கொண்டிருக்கிறது. இன்னும் 2 நாட்களில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை குறித்து தகவல்கள் வெளிவரும். இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்கக்கூடாது என பிரதமர் கூறியிருப்பதற்கு, இந்தியாவை மேன்மையடைய செய்யக்கூடாது என்பதுதான் அர்த்தம். பாஜக ஆள் பிடித்து பார்க்கிறது. வருமான வரித்துறை போன்ற நண்பர்களையும், சோதனைக்கு அனுப்புவார்கள். பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவதை வன்மையாக கண்டிக்கிறேன்.

The post திமுக-காங்கிரஸ் வெற்றி கூட்டணியாக உள்ளது: செல்வப்பெருந்தகை பேட்டி appeared first on Dinakaran.

Tags : DMK ,Congress ,Selvaperundhai ,Meenambakkam ,Tamil Nadu Congress ,president ,Selvaperunthagai ,Delhi ,
× RELATED ஜனநாயகப்புலிகள் கட்சியை...