- சட்டமன்ற உறுப்பினர்
- கடலூர்
- கடலூர் மாவட்டம்
- பன்ருதி ஆதிமுகா
- எல்.
- சத்ய
- பன்னீர்
- செல்வம்
- சத்ய
- பன்னீர் ரிச்சம்
- அத்தமுகா
- உயர் நீதிமன்றம்
- தின மலர்
கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா பன்னீர் செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 2011-16 அதிமுக ஆட்சியில் நகராட்சி தலைவராக சத்யாவின் கணவர் பன்னீர் செல்வம் இருந்தபோது டென்டர் விடுவதில் ரூ.20 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பன்னீர்செல்வம், அப்போதைய நகராட்சி கமிஷனர் பெருமாள் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதியப்பட்ட நிலையில் தற்போது சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பண்ருட்டி மற்றும் சென்னை உள்ளிட்ட 5 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
The post முன்னாள் அதிமுக எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை appeared first on Dinakaran.