×

நித்திரவிளை அருகே விஷம்குடித்து தொழிலாளி தற்கொலை

நாகர்கோவில், பிப்.28: நித்திரவிளை அடுத்த எஸ்.டி.மங்காடு அருகே உள்ள வாவறை வாழ விளாகம் பகுதியை சேர்ந்தவர் சோபனராஜ் (45). 100 நாள் வேலை திட்ட தொழிலாளி. இவருக்கு பிரேமா என்ற மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். சோபனராஜீக்கு, மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் வயிற்று வலி பிரச்சினை ஏற்பட்டு மிகவும் அவதிப்பட்டு வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று, வீட்டின் படுக்கை அறையில் சோபனராஜ் மயங்கிய நிலையில் கிடந்தார். இதையடுத்து அவரது மனைவி பிரேமா சென்று பார்த்த போது, எறும்பு பொடி கலக்கி குடித்து இருந்தது தெரிய வந்தது. உடனடியாக அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோபனராஜை சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்தவர் நேற்றுமுன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The post நித்திரவிளை அருகே விஷம்குடித்து தொழிலாளி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Nithravila ,Nagercoil ,Sopanaraj ,Vavarai Vazha Vilagam ,ST Mangadu ,Prema ,Sopanarajee ,Dinakaran ,
× RELATED சாலைகள் உயர்த்தப்பட்டுள்ளதால்...