×

மாநில மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு போட்டி வெற்றி பெற்ற வீரர்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் பாராட்டு

தூத்துக்குடி, பிப். 28: மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களை அமைச்சர் கீதாஜீவன் பாராட்டினார். சென்னையில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் சப்-ஜூனியர் மற்றும் ஜூனியர் பிரிவுகளில் வெற்றி பெற்ற தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பாரா விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பதக்கங்களுடன் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவனை சந்தித்தனர். அப்போது அவர்களை அமைச்சர் கீதாஜீவன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட பாரா விளையாட்டு சங்க தலைவர் கிறிஸ்டோபர் விஜயராஜ், செயலாளர் ஸ்டீபன், துணைச் செயலாளர் ஜெயலட்சுமி, செயற்குழு உறுப்பினர் அஜிஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post மாநில மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு போட்டி வெற்றி பெற்ற வீரர்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Minister ,Geethajeevan ,State Disabled Sports Competition ,Thoothukudi ,Tamil Nadu Sports University ,Chennai ,
× RELATED தூத்துக்குடியில் கனிமொழிக்கு ஆதரவாக...