×

தமிழ்நாடு மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை நீதிமன்றம் சிறை தண்டனை விதிப்பு: ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் போராட்டம்

ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழ்நாடு மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை நீதிமன்றம் சிறை தண்டனை விதித்ததை அடுத்து ஒன்றிய அரசை கண்டித்து மீனவர்களுக்காக ஆதரவாக காங்கிரஸ் கட்சியினர் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் மீனவர் அணி சார்பில் பாம்பனில் கடலில் இறங்கி மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது. மீனவர்கள் பிரச்சனைக்கு ஒன்றிய அரசு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கவில்லை என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

The post தமிழ்நாடு மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை நீதிமன்றம் சிறை தண்டனை விதிப்பு: ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Congress ,Union government ,Rameswaram ,Congress party ,Congress Fishermen's Team ,Pamban ,Nadu ,
× RELATED “இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய...