×

ரூ.2.88 கோடி தங்கம் கடத்தல் 2 பெண்கள் கைது

மும்பை: சட்டவிரோதமாக ரூ.2.88 மதிப்பிலான தங்கத்தை கடத்திய கென்யா நாட்டைச் சேர்ந்த 2 பெண்களை போலீசார் கைது செய்தனர். கென்யாவில் இருந்து மும்பை வந்த விமான பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில், கென்யாவைச் சேர்ந்த காடிஜா துலு(48) என்ற பெண் ஒருவர் ரூ.1.30 கோடி மதிப்பிலான தங்கத்தையும், நஜ்மா முகம்மது சேக்(34) என்ற பெண் ரூ.1.58 கோடி மதிப்பிலான தங்கத்தையும் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரிடம் இருந்து ரூ.2.88 மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், 2 பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். 2 பேரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

The post ரூ.2.88 கோடி தங்கம் கடத்தல் 2 பெண்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Kenya ,Khadija Tulu ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 609 புள்ளிகள் சரிவு..!!