×

வேலை தருவதாக கூறி ரூ.7.3 லட்சம் அபேஸ் செய்த 3 பேர் கைது

மும்பை: தென்மும்பை பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு அடையாளம் தெரியாத எண்ணில் இருந்து வாட்ஸ்ஆப் தகவல் வந்தது. அதில் பகுதி நேர வேலையில் அதிக சம்பாதிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. அதில் கொடுக்கப்பட்ட எண்ணிற்கு தொடர்பு கொண்ட போது முதலில் சிறிய தொகையை முதலீடு செய்ய ஆசாமிகள் 3 பேர் கூறினர். அதன்பிறகும் ஆசாமிகளின் பேச்சைக்கேட்ட நபர், கொஞ்சம் கொஞ்சமாக ரூ.7.3 லட்சம் வரை முதலீடு செய்தார்.

முதலீடு செய்த பணத்திற்கு எந்த வட்டியும் லாபமும் கிடைக்கவில்லை. எனவே, ஆசாமிகளை தொடர்புகொண்டு விசாரித்தார். ஆனால், அவர்கள் சரிவர பதிலளிக்கவில்லை. இதன் மூலமாக தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், வங்கி விபரங்களை வைத்து ஆசாமிகளை தேடிவந்தனர். அதன்பேரில், ஆசாமிகளை அடையாளம் கண்ட போலீசார், 3 பேரையும் கைது செய்தனர்.

The post வேலை தருவதாக கூறி ரூ.7.3 லட்சம் அபேஸ் செய்த 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Mumbai ,South Mumbai ,WhatsApp ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 609 புள்ளிகள் சரிவு..!!