- நாகர்கோயில் புத்தகம்
- நாகர்கோவில்
- 5வது புத்தகத் திருவிழா
- SLP அரசு மேல்நிலைப் பள்ளி
- குமாரி மாவட்ட நிர்வாகம்
- தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம்
- தின மலர்
நாகர்கோவில், பிப்.27: நாகர்கோவிலில் 5வது புத்தக திருவிழா கடந்த 17ம் தேதி நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலை பள்ளியில் தொடங்கியது. குமரி மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் இந்த புத்தக திருவிழாவை நடத்துகிறது. கலெக்டர் தர் புத்தக கண்காட்சியை திறந்து வைத்திருந்தார். தினமும் நூற்றுக்கணக்கானோர் புத்தக கண்காட்சியை பார்வையிட்டு புத்தகங்களை வாங்கி செல்கின்றனர். இந்தநிலையில் புத்தக திருவிழா இன்று (27ம் தேதி) நிறைவு பெறுகிறது. இதனையொட்டி இன்று பிற்பகல் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. மாலையில் கருத்தரங்கமும், விருந்தினர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
The post நாகர்கோவிலில் புத்தக திருவிழா இன்று நிறைவு appeared first on Dinakaran.