- தர்மபுரி
- தர்மபுரி, மாவட்டம்
- சமாஜ்வாடி
- ஸ்டீபன் ஜேசுபாதம்
- தர்மபுரி மாவட்ட காவல்துறை
- பெண்கள் திட்டத்தை கொண்டாடுங்கள்
- தர்மபுரி அவ்வையர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி
- அதியமான்கோட்டை
தர்மபுரி: தர்மபுரியில், அரசு பள்ளி மாணவிகளுக்கு கராத்தே பயிற்சியை மாவட்ட எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் தொடங்கி வைத்தார். தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில், பெண் குழந்தைகளை கொண்டாடுவோம் திட்டத்தின் மூலமாக, தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மற்றும் அதியமான்கோட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் என 80 மாணவிகளுக்கு, கராத்தே பயிற்சி வழங்கப்படுகிறது. பெண் குழந்தைகளை வலிமையாகவும், தைரியமிக்க பெண்ணாக உருவாக்க இந்த கராத்தே பயிற்சி அவர்களுக்கு வழங்கப்படுகிறது. தர்மபுரி மாவட்ட எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் கராத்தே பயிற்சியை தொடங்கி வைத்தார். இதில் தர்மபுரி ஏடிஎஸ்பி இளங்கோவன், டிஎஸ்பிக்கள் நாகலிங்கம், சிவராமன், இன்ஸ்பெக்டர் வேலுதேவன் மற்றும் கல்வி அலுவலர் ஜோதிசந்திரா, தலைமை ஆசிரியர் கலைச்செல்வி, கராத்தே பயிற்சியாளர் நடராஜ் கலந்து கொண்டனர்.
The post பள்ளி மாணவிகளுக்கு இலவச கராத்தே பயிற்சி appeared first on Dinakaran.