×

இலவச வீட்டுமனை கோரி நாட்டுப்புற கலைஞர்கள் கலெக்டரிடம் மனு

 

காஞ்சிபுரம்: இலவச வீட்டுமனை கோரி நாட்டுப்புற கலைஞர்கள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். தமிழ்நாடு நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் நல சங்கம் சார்பில் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நாட்டுப்புற கலைஞர்கள் மண்டலத் தலைவர் கலைச்செல்வன் தலைமையில் காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகனிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களில் 500க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் வசித்து வருகிறோம். தற்போது நாட்டுப்புற கலைகள் மூலம் கிடைக்கும் வருமானம் மிகக்குறைவாக உள்ளதால் வாழ்வாதாரம் என்பது மிகுந்த கேள்விக்குறியாக உள்ளது.

ஆகவே கிடைக்கிற நிகழ்ச்சிகளை வைத்துக்கொண்டு சொற்ப வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வருகிறோம். சொந்தமாக ஒரு வீட்டு மனை என்பது எங்களுக்கு பெரும் கனவாக இருக்கிறது. ஆகவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கி எங்கள் வாழ்வில் ஒளி ஏற்ற வேண்டும். இதேபொல்ல் மற்ற மாவட்டங்களிலும் இந்த வீட்டுமனை திட்டத்தை விரிவு படுத்த வேண்டும்.
இவ்வாறு கூறியிருந்தனர்.

The post இலவச வீட்டுமனை கோரி நாட்டுப்புற கலைஞர்கள் கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Tamil Nadu Drama and Folk Artists Welfare Association ,Kalaichelvan ,Tiruvallur ,Chengalpattu ,Vellore ,Ranipet ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...