×

மணீஷ் சிசோடியா பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவு : அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், “ஓராண்டாக மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக ஒரு ஆதாரத்தை கூட மத்திய அரசால் சமர்ப்பிக்க முடியவில்லை. 75 ஆண்டுக்குப்பின் தரமான கல்வி, ஏழை குழந்தைகளுக்கு ஒளிமயமான எதிர்காலத்திற்கு நம்பிக்கை கொண்டு வந்தவர் மணீஷ் சிசோடியா,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post மணீஷ் சிசோடியா பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவு : அரவிந்த் கெஜ்ரிவால் appeared first on Dinakaran.

Tags : Manish Sisodia ,Arvind Kejriwal ,Delhi ,Chief Minister ,Deputy Chief Minister ,
× RELATED இனிப்பு வகைகளை வேண்டுமென்றே...