×

3 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை

ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் போலீசுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் நக்சலைட்டுகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ட்டீஸ்கரின் கங்கர் மாவட்டத்தில் உள்ள கொயாலிபேடா பகுதியில் மாவட்ட போலீசார் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் இணைந்து நக்சல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, வனப்பகுதியில் பதுங்கியிருந்த நக்சலைட்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது.

போலீசார் சுட்டதில் நக்சலைட்டுகள் 3 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. அந்த பகுதியில் துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து நடந்து வருகிறது. பிஜப்பூர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் வைத்த கண்ணிவெடியில் சிக்கி போலீஸ் ஏட்டு ஒருவர் உடல் சிதறி உயிரிழந்தார்.

The post 3 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை appeared first on Dinakaran.

Tags : Naxalites ,Raipur ,Chhattisgarh ,District Police and ,Border Security Force ,Naxals ,Koyalipeda ,Gangar district ,Teeskar ,Dinakaran ,
× RELATED சத்தீஸ்கர் கான்கேர் மாவட்டத்தில் 8...